இன்று முதல் தமிழகத்துக்‍கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்- ஒழுங்காற்றுக் குழு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்துக்‍கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்று முதல் 31-ம் தேதி வரை தினமும் ஒரு டிஎம்சி வீதம் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது. தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவை சென்றடையும் நீரின் அளவு ஒரு டி.எம்.சி.யாக இருக்க இருப்பது அவசியம் என பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

Night
Day