இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சல பிரதேச விபத்தில் உயிரிழந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. 

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி, கடந்த 4ஆம் தேதி இமாச்சல்பிரதேசத்தில் விபத்தில் சிக்கினார். அவரது கார் விபத்தானதைத் தொடர்ந்து, அவரது உடல் மாயமானது. அதைத் தொடர்ந்து, 8 நாட்களாக தீவிர தேடுதலுக்கு பின், விபத்து நடந்த இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி, வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், வெற்றி துரைசாமியின் உடல், இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனையடுத்து வெற்றி துரைசாமியின் உடல், சண்டிகர் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, தனி வாகனம் மூலம் தாம்பரம்- ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றி துரைசாமியின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வெற்றி துரைசாமியின் உடல் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது தந்தை சைதை துரைசாமியின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் வாகன மூலம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Night
Day