இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 6 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலையாகி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் அவர்கள் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து தனிவாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Night
Day