இலங்கை சிறையில் வாடிய 5 தமிழக மீனவர்கள் விடுதலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த பாம்பன் மீனவர்கள் 5 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.


கடந்த 28-ம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எட்டு பேரும் சிறைகாவல் முடிந்து இன்று மன்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 5 பேரை மட்டும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மூன்று பேர் இரண்டாம் முறையாக எல்லை தாண்டி வந்ததாகக்கூறி ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட ஐந்து மீனவர்களும் ஓரிருநாளில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day