இலவசமாக கல்லூரி படிப்பை பயில சீட் வழங்கியது எத்திராஜ் கல்லூரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழ்மை நிலையிலும் அரசு பள்ளியில் பயின்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு சென்னை எத்திராஜ் கல்லூரியில் இலவசமாக கல்லூரி படிப்பை பயில சீட் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்றி ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபனின் மகளான பூங்கோதை,  12ஆம் வகுப்பு பொது தேர்வில் 578 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து மிகவும் சிரமப்பட்ட போதும் தனது விடா முயற்சியால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்த மாணவிக்கு சென்னை எத்திராஜ் கல்லூரியில் இலவசமாக கல்லூரி படிப்பை பயில சீட் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு CA படிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்த மாணவி பூங்கோதை, எத்திராஜ் கல்லூரி அளித்துள்ள வாய்ப்பு மூலம் B.Com படிப்பை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Night
Day