ஈரோடு: அரசு போக்‍குவரத்துக்‍ கழக பணிமனை முன்பு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு போக்‍குவரத்துக்‍ கழக கிளை மேலாளர் பணி நெருக்‍கடி தருவதாக குற்றம் சாட்டி, ஓட்டுநர்களும், நடத்துநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 500க்கும் மேற்பட்ட ஒட்டுநர்களும் நடத்துனர்களும் பணபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இருந்து சேலம் வரை இயங்கும் அரசு பேருந்தை ஓட்டுநர் செந்தில்குமாரும், நடத்துனர் வடிவேலும் இயக்கி உள்ளனர். பின்னர் பணி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்களை மீண்டும் பேருந்தை இயக்கும்படி கிளை மேலாளர் சக்திவேல் நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த பணியாளர்கள் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day