ஈரோடு: இரவு நேரத்தில் குட்டிகளுடன் பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே இரவு நேரத்தில் அரசுப்பேருந்தை யானைக்கூட்டம் வழிமறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசனூர் அருகே தலமலை செல்லும் சாலையில் நேற்றிரவு அரசுப்பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் வழியை மறித்தவாறு நின்று கொண்டிருந்தது. இதையடுத்து சிறிதுநேரம் கழித்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day