தமிழகம்
கல்வராயன்- 4 வாரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் வயதான தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர். செம்படாபாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் - ராஜம்மாள் என்ற மூத்த தம்பதியர் இருவர் இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டை பட்லூர் நால்ரோடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ராஜம்மாள் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆறுமுகமும் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...