ஈரோடு: காட்டுயானை தாக்கியதில் கணவன், மனைவி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே காட்டுயானை தாக்கியதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். காரச்சிக்கொரை பூதிகுப்பை பகுதியை சேர்ந்தவர் நஞ்சன். இவர் தனது மனைவி துளசியம்மாளுடன் வால்மொக்கை வனப்பகுதியில் சுண்டைக்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day