ஈரோடு: குடிசை வீட்டை இடித்து தள்ளிய ஒற்றை கொம்பன் யானை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஒற்றை கொம்பன் யானை குடிசை வீட்டை இடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை கொம்பன் யானை, மாவநத்தம் கிராமத்தில் உள்ள கணேசன் என்பவருடைய குடிசை வீட்டை இடித்து தள்ளியது. இதனை பார்த்து கிராம மக்கள் கூச்சலிட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அடிக்கடி கிராம பகுதிக்குள் நுழையும் ஒற்றை கொம்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day