ஈரோடு: தாயை இழந்த குட்டியானையை மீட்டு வனத்துறையினர் பராமரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டியானையை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். பண்ணாரி வனப்பகுதியில் தாய் யானை வயது முதிர்வால் உயிரிழந்த நிலையில், அதன் குட்டியானை வேறு யானைக்கூட்டத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் குட்டியானை பிரிந்து சென்று அரோபாளையம் ஊருக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற யானையை வனத்துறையினர் மீட்டு வனச்சரக அலுவலக வளாகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர். 

Night
Day