உடுமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனைமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பெரியகுளம், செங்குளம், செட்டியார் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள், நீர் நிலைகளில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் தொடங்கியது. முதல் நாளான இன்று நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீலதலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன.

varient
Night
Day