உதகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நஞ்ச நாடு பஞ்சாயத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கண்டன கூட்டம் நடத்தினர். உதகை நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற முடிவு செய்துள்ள தமிழக அரசு, கேத்தி, இத்தலார் பேரூராட்சி, உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை உதகை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடட்டுள்ளது. இதனால் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படும் எனக் கூறும் கிராம மக்கள் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தினர். உதகை மாநகராட்சித் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

varient
Night
Day