உதகையில் தேநீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் நெளிந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் தேநீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் நெளிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உதகை ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையின் உரிமையாளர் இன்று காலை உழவர் சந்தை அருகே உள்ள கடையில் இருந்து ஆவின் பால் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். தொடர்ந்து பாலை சூடு செய்வதற்காக பாத்திரத்தில் ஊற்றியபோது அதில் புழுக்கள் நெளிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், புழுக்கள் இருந்த பாலை சோதனை செய்தனர். தொடர்ந்து ஆவின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இன்றைய தேதியில் கடைகளுக்கு விற்பனை செய்துள்ள அதே வரிசை எண்கொண்ட பால் பாக்கெட்டுகள் விற்பனையை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாலில் புழுக்கள் நெளிந்தது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகள், விரைவில் இதுகுறித்து ஆய்வறிக்கை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Night
Day