உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் - கோயம்பேடு இடையிலான 30 கிலோமீட்டர் தூரம் குறைந்துள்ளதால், அதனை ஈடு செய்யும் விதமாக கூடுதலாக உளுந்தூர்பேட்டை விழுப்புரம் இடையே ஒரு முறை சென்று வர வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், 16 மணி நேரம் பணி செய்து வந்த தொழிலாளர்கள், 21 மணி நேரம் பணி செய்யும் நிலை உருவாகியுள்ளாதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அதிகாலை முதல் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day