ஊத்துமலையில் தெய்வத் திருமகனார் தேவர் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தில் அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னமாவுக்கு, ஊத்துமலை அருளப்பர் தேவாலயம் முன்பு, கிறிஸ்துவ பெருமக்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து, ஊத்துமலை பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்களிடையே உரையாற்றினார். புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில், தமிழக மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், தற்போது திமுக ஆட்சியில் எவ்விதமான மக்கள் நலத்திட்டங்களும் கிடையாது என்றும் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றும், திமுக ஆட்சியில் வெற்று விளம்பரங்கள் மட்டுமே செய்யப்படுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டினார். 

ஊத்துமலை பகுதியில் உள்ள, தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள் வீரவாள், நினைவு பரிசு வழங்கினார்கள். 


Night
Day