ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் படுகொலை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.பாப்பாங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக கண்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற போது அவரை வழிமறித்த மர்மநபர்கள், அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில்போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Night
Day