ஊராட்சி நிலம் ஆக்கிரமிப்பு - திமுக நிர்வாகிகள் மோசடியை அம்பலப்படுத்திய ஊராட்சிமன்றத் தலைவர்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஊராட்சி நிலத்தை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்ததை கண்டித்து, முதலமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோருக்‍கு அக்கட்சியின் ஊராட்சி மன்றத் தலைவர் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ணாவூர் ஊராட்சிக்‍குட்பட்ட பாமணி உள்ளூர் வட்டம் கிராமத்தில் அரசுக்‍கு சொந்தமான இடத்தில் பள்ளி கட்டடம், விளையாட்டு மைதானம் கட்ட ஊராட்சிமன்றத் தலைவர் தலைவர் சாரதிசரவணன் நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் அந்த இடத்தை திமுக நிர்வாகிகள் நடராஜன், செல்வகுமார் ஆகியோர் ஆக்‍கிரமித்து பல லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளும், அமைச்சரும் துணையாக இருந்ததை அக்கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவரே வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day