ஊழல் முறைகேடு - முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கு பஞ்சப்படியுடன் ஓய்வூதியம் - துணைவேந்தர் உத்தரவால் சர்ச்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் சிக்கிய முன்னாள் பதிவாளருக்கு பஞ்சப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த துணைவேந்தருக்கு பேராசிரியர்கள், பணியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற நிலையில், உயர்கல்வித்துறை குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் பதிவாளர் தங்கவேல் மீது பல்வேறு முறைகேடுகள் செய்ததாக அறிக்கையை அரசுக்கு வழங்கினர். இதனையடுத்து பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய இரண்டு முறை அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கு ஒரு லட்ச ரூபாய் பஞ்சப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார். 

varient
Night
Day