எந்த கேள்வி கேட்டாலும் ஆவேசப்பட்ட காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் எந்த கேள்வி கேட்டாலும் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவுக்கு கட்சி தாவப்போவதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பாஜக செல்வேன் என கூறியவனை செருப்பால் அடிப்பேன் என ஆவேசப்பட்டார். எம்.பிக்களை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கோபமடைந்த அவர், உங்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஆணவத்துடன் கூறினார். மேலும், தான் 50 வருட அரசியல்வாதி என்றும், யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கான தரம் வேண்டும் என்றும் பொங்கி எழுந்தார்.

Night
Day