எம்எல்ஏவின் காரை முறையாக சோதனை செய்யாத தேர்தல் பறக்‍கும் படை அதிகாரி பணியிடை நீக்‍கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முறையாக சோதனை செய்யாத தேர்தல் பறக்‍கும்படை அதிகாரியை மாவட்ட தேர்தல் அதிகாரி பணியிடை நீக்‍கம் செய்து உத்தரவிட்டார். டி.என். புதுக்‍குடி பகுதியில் கடந்த சில நாட்களுக்‍கு முன்பு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராதா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை மறித்து சோதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து ராதாவை பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்டத் தேர்தல் அதிகாரி கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day