எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி 2 படகுகளுடன் 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்

Night
Day