எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 15 மீனவர்களை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்களும் விசாரணைக்காக இலங்கை தலைமன்னார் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day