எல்லை தாண்டி மீன்பிடித்தால் இந்திய படகுகள் எரிக்கப்படும் - இலங்கை மீனவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தால் பறிமுதல் செய்யும் படகை எரிப்போம் என, இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை மீனவர்கள் கூட்டமைப்பினர், இனி வரும் காலங்களில் எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபடும் இந்திய படகுகளை பறிமுதல் செய்யும்போது படகுகளை எரிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை மீனவர்களின் இந்த அறிவிப்பு, ராமேஸ்வரம் மீனவர்களிடையு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day