ஏர்வாடி பேரூராட்சி திமுக தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை ஏர்வாடி பேரூராட்சியில் திமுக தலைவருக்கும் அக்கட்சியின் கவுன்சிலர்களுக்கும் இடையே நடக்கும் மோதலால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தஸ்லீமா என்பவர் பேரூராட்சித் தலைவராக உள்ள நிலையில் அவரது கணவரான அயூப்கான் திமுக நகர செயலாளராகவும் கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று நடந்த பேரூராட்சி கூட்டத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பேரூராட்சி பணிகள் முறையாக நடக்கவில்லை என்று அவர்களும், கவுன்சிலர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக தலைவரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர். இவர்களின் மோதலால் வாக்களித்த மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Night
Day