ஏற்காடு மலைப்பாதையில் வன விலங்குகள் குடிநீர், உணவின்றி தவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. அவற்றுக்கு போதிய உணவு கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஏற்காட்டில் உள்ள கொண்டை ஊசி வளைவில் அமர்ந்திருக்கும் குரங்குகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். தற்போது ஏற்காட்டில் கடும் வறட்சி நிலவுவதால் மலைப்பாதையில் ஆங்காங்கே தொட்டிகள் அமைத்தும் தண்ணீர் இன்றி குரங்குகள் தவிக்கின்றன. வனவிலங்குகளுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

varient
Night
Day