ஏற்காட்டில் மே 22ஆம் தேதி முதல் கோடை விழா துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47வது கோடை விழா மே மாதம் 22ம் துவங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை கோடை விழா நடைபெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. முக்கிய சுற்றுலா தளங்களான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, மான் பூங்கா, ரோஜா பூங்கா, குறிஞ்சி பூங்கா, பக்கோடா காட்சி முனை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

Night
Day