ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், சாலைகளிலும் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பணிகள் தொடர்ந்து 11 நாளாக குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது 

Night
Day