ஒகேனக்கல் - ஆபத்தான முறையில் பயணிக்கும் மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் ஓகேனக்கலில் மாறுகொட்டாய் கிராம மக்கள் தொங்கும் பாலத்தில் தொங்கிப்படி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வெள்ள பெருக்கு ஏற்பட்டு. சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் காவேரி ஆற்றில் சென்றதால் அருவி தொங்கும் பாலத்திற்கு செல்லக்கூடிய இரும்பு படிக்கட்டுகள் சேதமடைந்தது. மேலும் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளப்பெருக்கில் அடுத்து செல்லப்பட்டு பாறை மேல் விழுந்து கிடக்கிறது. இந்த பாலம் மாறு கொட்டாய் கிராம மக்களுக்கு பிரதான வழியாக இருந்த நிலையில்,  இடிந்துள்ள பாலத்தில் தொங்கியபடி உயிரை பனையம் வைத்து கடந்து செல்லும் நிலை ஏறட்டுள்ளது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து இடிந்து போன பாலத்தை சீரமைத்து தர வேண்டுமெனெ   அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day