ஒப்பற்ற திராவிட தலைவி அம்மா - புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் மண்ணின் ஒப்பற்ற திராவிட தலைவியாம் புரட்சித் தலைவி அம்மா என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவி அம்மாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடையை அறியாமையை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, சிறப்பு வாய்ந்த மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் அடைத்துவிட முடியாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவி அம்மாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடையை அறியாமையை, புரட்சித்தலைவி அம்மாவை பற்றிய தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் என புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

புரட்சித்தலைவி அம்மா, "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர் என்றும், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி புரட்சித்தலைவி அம்மா தான் என்பது நாடறிந்த உண்மை என்றும், சாதி மத பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தன்னை அர்பணித்துக்கொண்ட மாபெரும் தலைவர் புரட்சித்தலைவி அம்மா என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

"அம்மா என்றால் அன்பு" என்ற தாய்மைக்கு இலக்கணமாக நம்மோடு வாழ்ந்து மறைந்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா - புரட்சித்தலைவரை போன்று, புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்று புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா, தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த அத்துனை மக்கள்நலத் திட்டங்களும் இன்றைக்கும் பயனளித்து வருவதை யாராலும் மறுக்க முடியாது என்றும், அதிலும் குறிப்பாக பெண்ணினத்தை பாதுகாத்திடவும், அவர்களது நலனுக்காகவும் கொண்டு வந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் வரலாற்றில் முத்திரை பதித்தவை என்பதை சொல்லிக்கொள்வதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.  

புரட்சித்தலைவி அம்மாவின் விடாமுயற்சியால் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து, அதனை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து "சமூக நீதி காத்த வீராங்கனை" என்று போற்றப்பட்டவர் புரட்சித்தலைவி அம்மா என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

சத்துணவு தந்த சரித்திர நாயகன் வழிவந்த புரட்சித்தலைவி அம்மா, உலகமே வியந்து பார்க்கும் வகையில் அம்மா உணவகம் தந்து எண்ணற்ற ஏழைகளின் பசியைப் போக்கிய அன்னலட்சுமியாக வாழ்ந்து காட்டினார் என்று புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

ஆறு முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று தமிழக மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றும் வகையில் ஆட்சி செய்து "முதல்வர்" என்ற பதவிக்கு பெருமை சேர்த்த உன்னத தலைவராக விளங்கினார் என்றும், "ஜெ ஜெயலலிதா என்னும் நான்" என்று இந்த தமிழ் மண்ணில் எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ, அந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் தங்களது உரிமைகளை பறிகொடுத்து விடாமல் வாழமுடிந்தது என்றும், மேலும் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் தமிழக மக்களால் இருக்க முடிந்தது எனவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

ஏழை எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் புரட்சித்தலைவி அம்மா என்றும், புரட்சித்தலைவி அம்மாவிற்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது என்றும், அனைவரையும் சமமாக மதித்த ஒரே ஒப்பற்ற தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் இருந்தவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி காலங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதுகாப்போடு இந்த தமிழ் மண்ணில் வாழமுடிந்தது என்றும், தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வைத்து இருந்த பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சேரும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day