ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இட்டேரி ரோட்டில் உள்ள பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வினோத் திமுக நிர்வாகிகள் துணையுடன் அடியாட்களை கொண்டு தங்களது நிலத்தில் கம்பி வேலி அமைத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து, பச்சையப்பன் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பச்சையப்பன் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

varient
Night
Day