ஓசூரில் அமோக விளைச்சல் கொடுத்த முள்ளங்கிகளை அழித்த விவசாயி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முள்ளங்கி அமோக விளைச்சல் கொடுத்த நிலையில், விற்பனையாகாத விரக்தியில் பெண் விவசாயி டிராக்டரை ஏற்றி அழித்துள்ளார். கோடிகாலம் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண், தனது 2 ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி விதைத்துள்ளார். முள்ளங்கி அமோக விளைச்சல் கொடுத்த நிலையில் அறுவடை காலம் நெருங்கியது. இந்நிலையில் வியாபாரிகள் யாரும் முள்ளங்கியை வாங்க ஆர்வம் காட்டாததால், விரக்தி அடைந்த பெண் விவசாயி டிராக்டர் மூலம் முள்ளங்கி விளைச்சலை அழித்துள்ளார். தனியார் கம்பெனியிடம் இருந்து வாங்கிய விதைகளால் தான், தனக்கு இந்த நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்ட விவசாயி பாக்கியலட்சுமி, கம்பெனியிடம் இருந்து இழப்பீடு பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Night
Day