ஓசூர் : கிணற்றில் விழுந்த புள்ளிமான் பத்திரமாக மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சிவலிங்கபுரத்தை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில், காட்டில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தான தகவலின்பேரில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, மானை பத்திரமாக மீட்டு அஞ்செட்டி வனப்பகுதியில் விட்டனர்.

Night
Day