கச்சத்தீவு திருவிழாவுக்கு பைபர் படகில் செல்லக்கோரி மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கச்சத்தீவு கோயில் திருவிழாவுக்கு இயந்திரம் பொருத்திய பைபர் படகில் செல்ல அனுமதி கோரிய மனு மீது ஆட்சியர் உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலுக்கு இயந்திரம் பொருத்திய பைபர் படகில் செல்ல எரிபொருள் செலவு குறைவு மற்றும் ஒரு படகில் சுமார் 10 பேர் வரை செல்லலாம். எனவே பைபர் படகில் செல்ல உத்தரவிட வேண்டுமென உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார்- விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்தாண்டு கச்சத்தீவு திருவிழா நடைமுறைகள் நிறைவடைந்து விட்டது என்றும் இருப்பினும் அடுத்த ஆண்டிற்குள் மீனவர்கள் பைபர் படகில் செல்வது குறித்து 12 வாரத்தில் ஆட்சியர் முடிவெடுக்க வேண்டுமெனக் கூறி விசாரணையை முடித்து வைத்தனர்.

varient
Night
Day