கடந்த ஆகஸ்ட் மாதம் 95.43 லட்சம் பேர் பயணித்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 95 லட்சத்து 43 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, ஆகஸ்ட் மாதம் 95 லட்சத்து 43 ஆயிரத்து 625 பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தை விட 8 ஆயிரத்து 606 பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். ஜூலை மாதம் 95 லட்சத்து 35 ஆயிரத்து 19 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி 3 லட்சத்து 69 ஆயிரத்து 547 பேர் பயணம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day