கடலூர் : தரமற்ற சாலை - மக்களுடன் திமுகவினர் வாக்குவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலை குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக ஒன்றிய நிர்வாகி மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மிராளூர் ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி திமுக நிர்வாகி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்து வருகிறது. ஆனால் தார் சாலை தரமற்ற முறையில் அமைத்து வருவதாக கூறப்படுகிறது. இதனையறிந்த கிராம மக்கள் செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, திமுக ஒன்றிய செயலாளர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day