கடலூர்: திட்டு திட்டாக காட்சியளிக்கும் நெடுஞ்சாலை - விரைந்து சீரமைக்க கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திட்டக்குடி - ராமநத்தம் நெடுஞ்சாலையில் தினந்தோறும் இருசக்கர வாகனம், கனரக வாகனம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக இந்த சாலை கடல் அலை போல் திட்டு திட்டாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.  இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day