கடலூர்: புதிதாக போடப்பட்ட தார்சாலை சில மாதங்களிலேயே சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட தார் சாலை சேதம் அடைந்த ஆத்திரத்தில் பொதுமக்கள் ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பெருங்காலூர் பகுதியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. சில மாதங்களிலேயே சாலை சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஒன்றுகூடி ஒப்பந்ததாரரை சிறைபிடித்து வாக்குவாதம் செய்தனர். அப்போது பேசிய ஒப்பந்ததாரர் அனைவருக்கும் லஞ்சம் கொடுத்துதான் வேலை செய்கிறோம், என்ன செய்ய முடியுமோ பார்த்து கொள்ளுங்கள் என பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

varient
Night
Day