கடலூர்: வேன் - லாரி மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சிதம்பரம் அருகே வில்லியநல்லூரை சேர்ந்த 25 பேர் திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டிற்கு சென்று விட்டு கடலூருக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். வேன் நாரையூர் என்ற இடத்திற்கு வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Night
Day