கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்டவை முழுமையாக சேதமடைந்தன. இது தொடர்பாக இழப்பீடு கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயிகள் மேலகரந்தை சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 

Night
Day