கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தின்போது நிகழ்ந்த கலவர வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி மரணத்தின்போது நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரண வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த கலவர வழக்கை, வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்ற கோரி பள்ளி தாளாளர் மனு அளித்தார். அதில், சம்பவம் நிகழ்ந்து 20 மாதங்களாகியும் வன்முறையை தூண்டியவர்கள் யாரையும் விசாரணை செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டது.

varient
Night
Day