கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கி காணப்படுவதால் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரியில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் சுற்றுலா படகுகள் இயக்கம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 

கன்னியாகுமரிக்கு வருகை தரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், முக்கடல் சங்கமிக்கும் அழகை கண்டு ரசிப்பது வழக்கமாகும். இந்நிலையில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியதால், சுற்றுலா படகுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

varient
Night
Day