கன்னியாகுமரி: 9 வயது சிறுவன் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், கன்னியாகுமரியில் இன்று முதல் சளி, காய்ச்சலுக்கு மருத்துவமனைக்கு வருபவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. அதனை தொடர்ந்து, தமிழக கேரளா எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களில் 9 வயது சிறுவன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரியில் இன்று முதல் சளி, காய்ச்சலுக்கு மருத்துவமனைக்கு வருபவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

Night
Day