கன்னியாகுமரி: புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததன் 5ம் ஆண்டு நினைவு தினம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததன் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரி ஜவான்கள் அமைப்பு சார்பில், நாகர்கோவிலில்  வீரர்களின் படங்களுக்‍கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்‍குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதன் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரே 40 ராணுவ வீரர்களின் புகைப்படங்களை வைத்து, கன்னியாகுமரி மாவட்ட ஜவான் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, ஜவான்கள் திருவனந்தபுரம் பிரதான சாலையோரம் மரக்‍கன்றுகளை நட்டனர். 

Night
Day