கன்னியாகுமரி: அரசு டாஸ்மாக்கில் அதிக விலை வைத்து விற்கப்படும் மதுபாட்டில்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குமரி மாவட்டம் நித்திரவிளையில் அரசு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களுக்கு அதிக விலை வசூலிப்பதை தட்டிக் கேட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

நித்திரவிளை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட விலை அதிகம் வைத்து விற்பனை செய்துள்ளனர். அதன்படி ஒரு சில பாட்டில்களுக்கும் 5 ரூபாயும், ஒரு சில பாட்டில்களுக்கு 10 ரூபாயும் அதிகம் வசூல் செய்துள்ளனர். இதனை மது வாங்க சென்றை இளைஞர்கள் தட்டிக் கேட்டு, கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 

Night
Day