கன்னியாகுமரி: ஈஸ்டர் கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாளை மறுநாள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். குளச்சல் மற்றும் தேங்காய்ப்பட்டிணம் பகுதி மீனவர்கள் ஏராளமானோர் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் 15 முதல் 20 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே நாளை மறுநாள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடாடப்பட உள்ளதால் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இன்று மாலைக்குள் மீனவர்கள் அனைவரும் ஊர் திரும்பி விடுவார்கள் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் களைகட்டியுள்ளது.

Night
Day