கன்னியாகுமரி: கடலுக்‍குள் விடப்பட்ட ராட்சத உடும்பு சுறா உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கரை ஒதுங்கிய ராட்சத உடும்பு சுறா மீன் கடலுக்குள் விடப்பட்ட நிலையில் மீண்டும் உயிரிழந்து கரை ஒதுங்கியது. ததேயபுரம் கடற்கரை பகுதியில் ராட்சத உடும்பு சுறா மீன் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், உயிருக்கு போராடிய சுறா மீனை, மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் விட்டனர். ஆனால், அந்த சுறா மீண்டும் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த ராட்சத சுறாவை
அப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். 

Night
Day