கன்னியாகுமரி: சக்கரம் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சக்கரம் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பம், மற்றும் சுவர் மீது  மோதிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெமால்ட் என்பவர் தனது சொகுசு காரில் மார்த்தாண்டத்தில் இருந்து நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். நடவரம்பன்கரை பகுதியில்  வந்த போது காரின் சக்ரம் பஞ்சர் ஆகி உள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார்  சாலையோரம் இருந்த இருசக்கர வாகன விற்பனை நிலையத்தின் சுற்றுச்சுவர் மற்றும்  மின் கம்பத்தின் மீது மோதியது. விபத்தில் நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்ட்டது. 

Night
Day