கன்னியாகுமரி: சாலையில் தறிகெட்டு ஓடிய டாரஸ் லாரியால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடத்தில் கனிம வளங்களை கொண்டு செல்லும் டாரஸ் லாரி தறி கெட்டு ஓடி அவ்வழியாக சென்ற கார், பைக், ட்ராக்டர் போன்றவற்றின் மீது மோதி சாலை ஓரம் இருந்த வீட்டினுள் புகுந்த விபத்துக்குள்ளானது. 
கனிமவளங்கள கேரளாவில் கொண்டு இறக்கி விட்டு கன்னியாகுமரிக்கு வந்த டாரஸ் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வெள்ளமடத்தில் சாலை ஓரம் என்ற கார் மோட்டார் பைக் மற்றும் டிராக்டர் வாகனங்களை எடுத்து தள்ளிவிட்டு வீட்டினுள் புகுந்தது. விபத்துகுறித்து தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் டாரஸ் லாரி ஓட்டுனர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

Night
Day