கன்னியாகுமரி: டாரஸ் லாரி மோதியதில் போக்குவரத்து காவலர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதியதில் போக்குவரத்து காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தக்கலை காவல் நிலைய போக்குவரத்து காவலராக பணிபுரிந்தவர் ஜஷ்டின். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சுங்கான்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காவலர் ஜஸ்டின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கனிம வளங்கள் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளால் விபத்துகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Night
Day